Posts

Showing posts from May, 2022

திரிபுராந்தகர்

Image
பாதாமி அருங்காட்சியக சிற்பம் நான் கீழ்கண்ட திரிபுராந்தகரின் சிற்பத்தைப் பார்த்தது கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அருங்காட்சியகத்தில். 29/10/2019 அன்று. நுழைவாயிலை அடுத்த முன் கூடத்தில் இருந்தது சிற்பம். அருங்காட்சியகத்தில் உள்ள முதன்மையான காட்சிப்பொருட்களில் இதுவும் ஒன்று. இந்த சிற்பம் பட்டடக்கல் விருபாக்ஷர் கோயிலில் இருந்து கிடைத்தது.. 8 ஆம் நூற்றாண்டு, சாளுக்கியர் கலை. திரிபுராந்தகர்: பாதாமி அருங்காட்சியகம். Source:  https://www.deccanherald.com/spectrum/spectrum-top-stories/past-preserved-735815.html முப்புரம்  சிற்பத்தின் மேல் இடது மூலையில் அம்பு குறிபார்த்து உள்ளது முப்புரம் (வடமொழியில் திரிபுரம்) எனும் மூன்று கோட்டை நகர்கள். ஒன்று பொன்னாலானது, தாரகாக்ஷனுக்குரியது. வெள்ளியாலான  இரண்டாவது கமலாக்ஷனுக்குரியது.  இரும்பாலான மூன்றாவது வித்யுன்மாலிக்குரியது. இம்மூவரும் முருகனால் கொல்லப்பட்ட தாரகாசுருனுடைய மகன்கள். நான்முகனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து பெற்ற வரங்களால் மயனை அழைத்து இந்த முப்புரங்களை அமைத்துக்கொண்டனர். வெல்லற்கரிய...

ஆயுத புருஷர்கள்

Image
தெய்வங்களின் ஆயுதங்களை தெய்வங்களின் உயிருள்ள அடியார்களாக, இறையம்சம் கொண்டவர்களாகக் கருதுவது மரபு. அவர்களுக்குப் பெயர்கள் உண்டு. அவர்களில் சிலர் வழிபாட்டுக்கு உரிய துணை தெய்வங்களாகவும் கோயில்களில் அமைகின்றனர். திருமால் திருமாலின் ஆயுதங்கள் ஐந்து. ஆழி (சக்கரம்) - சுதர்சனர் சங்கு - பாஞ்சஜன்யம் வில் - சார்ங்கம் தண்டு (கதை) - கௌமோதகி வாள் - நந்தகம் சாரங்கபாணி (பாணி - ஏந்தியவன்), சக்ரபாணி என இவர்களைக் கொண்டு திருமால் அறியபடுகிறான். இந்த ஐவரும் திருமாலின் ஆயுதங்களாக அமைவது மட்டுமின்றி அவரோடு எப்போதும் உடனிருந்து காவல் பணியும் செய்வர். ஊழி முடிவில் பெருமாள் யோக நித்திரையில் பள்ளி கொண்டிருக்கும் போதும் உறங்காது காவல் காப்பர். திருமெய்யம் குடைவரையை உள்ள அவ்வாறு உறங்கும் பெருமாள் அமைந்த சிற்பத்தொகுதியில் அவரை தாக்க வரும் அசுரர்கள் மது, கைடபர்களை எதிர்த்துத் தாக்கும் ஐந்து ஆயுத புருஷர்களுடைய உருவங்கள் பிரம்மாவின் இருபுறமும் அமைந்துள்ளன. திருமெய்யம் குடைவரை [பள்ளிகொண்டபெருமாள் சிற்பத்தில் ஆயுத புருஷர்கள் ஐவர் பாதாமி சாளுக்கியர் கோயில்களில் விஷ்ணுவின் சிற்பத்தில் கதை கௌமோதகி என்ற பெண்ணுருவமாக காட்ட...

விசிறிக்கல்

Image
விசிறிக்கல், பறவைக்கல் என்னும் பெயர்களில் அழைக்கப்படும் சிற்பம் கல்லில் வடிக்கப்பட்ட, தொன்மையான, பெரிய அளவிலான, குறியீட்டுச் சிற்பமாகும். இந்தச் சிற்பம் பெருங்கற்காலத்தைச் சேர்ந்ததாகவும் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகவும், தாய்த்தெய்வ வழிப்பாட்டின் முன்னோடியாகவும்  கருதப்படுகிறது. இடங்கள் தமிழகத்தில் இரண்டு இடங்களில் விசிறிக்கல் கிடைத்துள்ளது. தா மோட்டூர் - திருவண்ணாமலை மாவட்டம் உடையாநத்தம் - விழுப்புரம் மாவட்டம் தா மோட்டூர் அமைவிடம் திருவண்ணாமலை - அரூர் - சேலம் சாலையில் திருவண்ணாமலையில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ள ஊர் தானிப்பாடி. தானிப்பாடியில் இருந்து சுமார் சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ளது தா வேளூர். அவ்வூருக்குச் செல்லும் சாலை தானிப்பாடி பேருந்து நிறுத்தத்தின் முன் பிரிகிறது. தா. வேளூர் பக்கத்தில் இருக்கும் ஒரு  கிராமம் தா மோட்டூர் (தானிப்பாடி மோட்டூர்). தென்பெண்ணையாற்றின் தெற்கே அமைந்துள்ளது. ஊரில் இருந்து ஒரு கரடுமுரடான பாதை வழியாக விசிறிக்கல் இருக்கும் இடத்தை அடையலாம். கடைசியில் வயல்கள் ஊடாக ஒரு பொடிநடை.  அப்பகுதி மக்கள் இவ்விடத்தைக் 'கூத்தாண்டவர் ...

கோபியர் ஆடை திருடும் கண்ணன்

Image
கோபியர் தங்கள் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு யமுனை நதியில் நீராடினர். குறும்புக்காரக் கண்ணன் அந்த ஆடைகளை எடுத்துக்கொண்டு கரையோர மரத்தின் மீது ஏறிக்கொண்டான். ஆடை வேண்டி கோபியர் கண்ணனை நோக்கி ஓலமிட்ட காட்சி தூண் புடைப்பு சிற்பங்களுக்கு ஒரு முக்கியக் கரு. கடவுளர் திருவுருவங்களைச் செதுக்கும்போது சிற்பியின் கற்பனைத் திறனுக்கு ஆகமங்கள் கடிவாளம் இடும். இக்காட்சிக்கு அத்தகைய தடைகள் இல்லாததால் இதன் ஒவ்வொரு படைப்பும் சிற்பியின் கற்பனைக்கு ஏற்ப வேறுபட்டிருப்பதைக் காணலாம். மரம், மரத்தின் மீது கண்ணன், அவன் கையில் ஆடைகள், ஆடைகளில்லா பெண்கள், அவர்கள் எண்ணிக்கை, கண்ணனிடம் ஆடை வேண்டி ஓலமிடும் வெவ்வேறு உடல் மொழி, நிலைகள் இவற்றை சிற்பிகள் தங்கள் கற்பனைக்கேற்ப ரசித்து வடித்த சிற்பங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் வெவ்வேறு மண்டபங்களின் தூண்களில் உள்ளன. அவற்றின் ஒரு தொகுப்பு. திட்டி வாசல் பெரிய நந்திக்கு பின் உள்ள 4 கால் ருத்திராக்ஷ மண்டபம் குதிரை மண்டபம் தீபதரிசன மண்டபம் தீபதரிசன மண்டபம் கல்யாண மண்டபம் மேற்கண்ட சிற்பங்கள் ஒரே சட்டகத்தில் அமைந்திருக்க,...

புருஷாமிருகம்

Image
திருக்கார்த்திகை திருவிழாவின் எட்டாம் நாள் உற்சவத்தில் பிறைசூடிய பெம்மானை (சந்திரசேகரர்) சுமந்து வரும் பேறு பெற்றது, புருஷாமுனி வாகனம். மனிதன் பாதி, விலங்கு பாதி இரண்டும் சேர்ந்த கலவையாய் உருவான படிமங்களுள் ஒன்று புருஷாமிருகம் - மேல்பாதி மனிதன், கீழ் பாதி புலி. புருஷாமிருக வாகனம் ராஜகோபுரத்தின் வழியாக அங்கு இருக்கும் 'செல்வக் கணபதியைக் கைதொழுது' ஐந்தாம் திருசுற்றில் நுழைந்தவுடன், திரும்பி ராஜகோபுரத்தின் பின் சுவரை பாருங்கள். வாசலின் தென்புறம் புருஷாமிருகத்தின் புடைப்பு சிற்பம் ஒன்றைக் காணலாம். புருஷாமிருகம் ராஜகோபுரம் கிரீடம், தாடி மீசையுடன் முனிவர் முகம். முகத்தில் புன்னகை. இரு புலிக்கால்களில் நின்று விலங்கு போல் முன்புறம் நீண்ட உடல். தூக்கிய வால். வலது கையில் தீபமும், இடது கையில் மணி ஏந்தி பூசனை செய்யும் கோலம். கோயிலின் பல தூண்களில், சுவர்களில் புருஷாமிருகத்தின் புடைப்பு சிற்பங்கள் உள்ளன - திட்டிவாசல் தெற்கு பக்கத் தூண்களில் ஒன்றில், கார்த்திகை மண்டப தெற்கு பக்கத் தூண்களில் ஒன்றில், வளைகாப்பு மண்டப வடமேற்கு மூலைத் தூணின் போதிகையில். திட்டி வாசல் தெற்கு பக்கத்...

லஜ்ஜா கௌரி

Image
நான் லஜ்ஜா கௌரியின் சிற்பத்தைப் பார்த்தது கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அருங்காட்சியகத்தில். 29/10/2019 அன்று. முன் கூடத்தின் பின்னால் உள்ள அறையில் இருந்தது சிற்பம். அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப்பொருட்களில் முதன்மையானது இது. லஜ்ஜா கௌரி: பாதாமி அருங்காட்சியகம்  இந்த சிற்பம் பாதாமியில் இருந்து 8 கிமீ தொலைவிலுள்ள நாகநாதனகொள்ள என்ற இடத்தில் கிடைத்தது. கிடைக்கப்பெற்றுள்ள லஜ்ஜா கௌரி சிற்பங்களுள் சிறந்ததாகவும் முழுமையானதாகவும் கருதப்படுவது இது. நிர்வாணமாய் திரண்ட முலைகளுடன் கால்களை மடக்கி விரித்து யோனியைக் காட்டியவாறு உள்ள  சிற்பம். தலைக்குப் பதிலாக தாமரை. இரு கரங்களிலும் தாமரை மலர்கள். மலர்களின் தண்டுகள் கைகளைச் சுற்றியுள்ளன.  மலர்களை ஏந்தியுள்ள முறை - சுட்டு விரல், நடு விரல்கள் ஒரு புறமும் கட்டை விரல் மறுபுறமும் அமைந்து தண்டைப் பற்றியவாறு -  ஆகம முறை கை (ஹஸ்தம்) அமைப்புகளிலிருந்து வேறுபட்டது. அழகான கீழ் வயிற்று மடிப்பு  அணிகள் -  சரப்பளி (Necklace), கைகளிலும் கால்களிலும் இரு இரு வளைகள், தோள் வளைகள், சன்ன வீரம்...

ஏழு கன்னியர் சிற்பங்கள் - பகுதி 2 : சிற்பங்கள்

Image
ஏழு கன்னியர் புராணங்களையும், சிற்ப அமைப்புக் கூறுகளையும், பல்வேறு இந்தியப் பகுதிகளில், காலங்களில் உள்ள சிற்பங்களையும் முதல் பகுதி விவரிக்கிறது.  ஏழு கன்னியர் - பகுதி 1 இந்தப் பகுதி பல கோயில்களில் உள்ள ஏழு கன்னியர் சிற்பங்களை காட்சிப்படுத்துகிறது. விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில் ஏழு கன்னியர்: விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் கோயில் சிற்பங்கள் தெளிவாக இல்லை என்றாலும் சுகாசனமாக அமர்ந்திருக்கும் ஏழு கன்னியரின் பீடங்களில் அவர்களது வாகனங்கள் உள்ளது தெரிகிறது. திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோயில்  ஏழு கன்னியர்: திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோயில் கன்னியர் இடம் மாரியுள்ளனர். முதல் இருவர் தொகுதி: இந்திராணி, சாமுண்டி இரண்டாம் ஐவர் தொகுதி: பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி கடைசியாக: வீரபத்திரர்.

ஏழு கன்னியர் - சப்த மாதர்

Image
அரகண்டநல்லூர்  ஒப்பிலாமணீசுவரர் கோயிலின் முதல் திருச்சுற்று மண்டபம் 'திருநடை மாளிகை'. அதன் தெற்குப் பகுதியில் மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது ஏழு கன்னியர் சிற்பத் தொகுதி. சிவன் கோயில்களில் அவ்வாறு அமைவது மரபு. ஏழு கன்னியரது வலது புறம் வீரபத்திரரும் இடது புறம் விநாயகரும் இருப்பர். யோக பட்டத்துடன் யோகாசனத்தில் வீரபத்திரர் அக்க மாலையும், கமண்டலமும் ஏந்திய நான்கு முக பிராம்மி  மழுவும் மானும் தாங்கிய  மகேசுவரி  சக்தி ஆயுதமும், இருதலைச் சூலமான வஜ்ராயுதமும் கொண்ட  கௌமாரி  ஆழியும், சங்கும் சூடிய வைஷ்ணவி  தண்டம், கலப்பைகளை கையில் எடுத்த பன்றி முக வராகி  வஜ்ராயுதமும், அம்பும் சுமந்த இந்திராணி  பின் கைகளில் உடுக்கை, பாசமும், முன்கைகளில் சூலம், மண்டையோடும் வைத்திருக்கும் சாமுண்டி. முன் அறுவரும் முன் வலது கை  அபயம் காட்ட, முன் இடது கையை தொடைமீது வைத்துள்ளனர்.   விநாயகர் சிற்பம் படத்தில் காட்டப்படவில்லை. தோற்றம்  கன்னியர் எழுவரும் ஆண் கடவுளரது துணைவியர் அல்ல. இந்திராணி இந்திரனின்...