ராஜேந்திர சோழன் வென்ற இடங்களில் இருந்து கொண்டு வந்த சிற்பங்கள்
ராஜேந்திர சோழன் வென்ற இடங்களில் இருந்து கொண்டு வந்த சிற்பங்களும் அவை தற்போது இருக்கும் இடங்களும்: 1. கல்யாணி சாளுக்கியர்கள் தலைநகரம் கல்யாணியிலிருந்து ஒரு துவார பாலகர் சிலை முதலில் பழையாறையில், பின்னர் தாராசுரம் கோயிலில், இப்போது தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ளது. அடியில் கல்வெட்டுப் பொறிப்பு - "ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ விஜயராஜேந்திர தேவர் கல்யாணபுரம் எறிந்து கொடுவந்த துவாரபாலகர்" வலது கால் அருகில் ஒரு பூனை ஒரு எலியை முன் கால்களால் பற்றியுள்ளது. இடது காலுக்குக் கீழ் ஒரு பாம்பு எலியைக் கவ்வியுள்ளது. இடது காலுக்குக் கீழ் ஒரு எலியும் பக்கத்தில் ஒரு எலியும் மேலே ஏறுகின்றன. திருவாசியின் இடது பக்கம் ஒரு உடும்பு (PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy pa62) 2. கங்கைகொண்ட கணபதி பாலர்களை வென்று வங்கதேசத்தில் இருந்து கொணர்ந்தது. இப்போது குடந்தை கீழ் கோட்டத்தில் உள்ளது. (PC: கவின்மிகு சோழர் கலைகள், Dr R Nagaswamy p60) அதை மாதிரியாக கொண்டு அமைத்த செப்புத்திருமேனி தஞ்சாவூர் கலைக்கூடத்தில் உள்ளது. 3.பாலர் ஆடல் வல்லான் மேலக் கடம்பூர் (Kadamburvijay, CC BY-SA 3.0 <https://creativecommon...