வீரபத்திரர்
சிவன் புரிந்த எட்டு வீரத் திருவிளையாடல்களில் ஒன்று தக்கன் யாகத்தை அழித்து அவன் தலையைத் துண்டித்தது. அதை அவர் நேரடியாகச் செய்யவில்லை. அதற்காக அவர் தன்னிலிருந்து உருவாக்கிய வீர அம்சமே வீரபத்திரர். இந்த நிகழ்வு குறித்த புராணக் கதை இறுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. சிற்ப இலக்கணம் ஸ்ரீதத்வநிதி, காரணாகமம் ஆகிய நூல்கள் வீரபத்ரரின் சிற்ப இலக்கணத்தைக் கூறுகின்றன. (1) கோபம் பொங்கும் பயங்கரமான முகம், மூன்று கண்கள், கோரைப் பற்கள் ஜுவாலாமகுடம் (*) 4 கைகள் - வலது கைகளில் வாளும், அம்பும்; இடது கைகளில் வில்லும், கதையும் மண்டையோட்டு மாலை மணிகளால் ஆன மாலை, தேள்களால் ஆன மாலை (*) நாகப் பூநூல் (*) அழகிய வீரக்கழல்கள் (*) குட்டை இடையாடை (*) கால்களுக்கு செருப்பு (#) பக்கத்தில் பத்ரகாளி(#) வலது பக்கத்தில் ஆட்டுத் தலை, அஞ்சலி முத்திரையுடன் தக்கன்(#) [ (#) - ஸ்ரீதத்வநிதியில் மட்டும் உள்ளது. (*) - காரணாகமத்தில் மட்டும் உள்ளது) ‘சில்ப ரத்தினம்’ என்ற நூல் வீரபத்திரரின் படிமம் எட்டுக் கைகளுடன் அமைக்கப்பட்டு, கணங்களால் சூழப்பட்டு, வேதாளத்தின் மீது அமர்ந்த நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்று விளக்கியுள்ளது. ‘சில்ப சங்கீர...