முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்
சிற்பங்களில் முருகருக்கு வாகனமாக விளங்கும் மயில்கள் மூவகை: மந்திர மயில் (பிரணவ மயில்) முருகர் மாங்கனி வேண்டி, உலகைச் சுற்றி வந்தபோது, அவருக்கு வாகனமாக இருந்தது மந்திர மயில். இது ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவம். அருணகிரிநாதர், "ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது ஆடுமயில் என்பது அறியேனே" என்று போற்றுகிறார். பொருள்: 'ஒப்பற்ற ஓங்கார மந்திர வடிவ நிலை கொண்டது ஆடும் மயில்தான் என்று அறியவில்லையே'. தகராலய ரகசியம் - (தகரம் - சிறிய ஆகாயம், அதாவது இதயம்). தியானத்தில் பிரணவ சொரூபமான மயில் மீது முருகனை பாலகனாக தரிசித்தல் . பாம்பன் சுவாமிகளுக்கு இந்தக் கோலத்தில் அவன் காட்சியளித்தான். இது `குக ரகசியம் என்றும் அழைக்கப்படுகிறது, தேவ மயில் (இந்திர மயில்) சூரபத்மனுடன் போரிடும்போது, சூரன் அவருடைய ஆற்றலுக்கு எதிர்த்து நிற்க முடியாமல் சக்ரவாகப் பட்சியாக உருவமெடுத்து ஓடினான். அவனைத் தொடர்ந்து செல்ல இந்திரன் மயிலாக உருமாறி முருகரைத் தாங்கிச் சென்றான். இது தேவ மயில். அசுர மயில் சூரபத்மனுடனான போரின் இறுதியில், முருகர் மருத மரமாக நின்ற அவனை வேலால் இரண்டாகப் பிளந்தார். அது, மய...