Posts

Showing posts from June, 2022

அண்டரண்டப் பறவை

Image
கண்டரண்ட பக்ஷி - இது ஒரு பேருருக் கொண்ட பக்ஷியெனக் கதைகளில் கூறியிருக்கின்றனர். நம்ப இடமில்லை. - அபிதான சிந்தாமணி அண்டரண்டப் பட்சி; நெடுங்குணம் யோக ராமர் கோயில் தமிழில் அண்டரண்டப் பறவை. கன்னடத்தில் கண்டபேருண்டப் பறவை.  இது ஒரு கற்பனையான புராணப் பறவை.  மேற்கண்ட படத்தில் மனித உருவமும் இரண்டு கழுகுத் தலைகளும் இரு இறக்கைகளும் கொண்டுள்ளது.  திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில். பல யானைகளை அடக்கித் தூக்கி கொண்டு பறக்கக் கூடிய வலிமை உடையதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சோமேசுவரர் கோயில் நந்தி மண்டபத் தூண் சிற்பம் மனித உருவம், இரண்டு கழுகுத் தலைகள், இரு இறக்கைகள் இரு கால்களின் கீழ் இரு யானைகள், இரு கைகளில் இரு யானைகள், இரு அலகுகளில் இரு யானைகள் என ஆறு யானைகளை வெல்லும் ஆற்றலையும் பேருருவத்தையும் சித்தரிக்கும் சிற்பம். ராமேசுவரர் கோயில், கேளடி, சிவமொக்கா மாவட்டம், கர்நாடகா (படம் நன்றி: Dineshkannambadi at the English-language Wikipedia, CC BY-SA 3.0 <http://creativecommons.org/licenses/by-sa/3.0/>, via Wikimedia Commons) கேளடி, கேளடி நாயக்கர்களின் தலைநகரமாக இருந்த ஊர். மேல் ப...

முக லிங்கம்

Image
சிவ லிங்கம் சிவ முகம் கொண்டிருந்தால் அந்த லிங்கம் முக லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. சிவலிங்கம் சிவனின் அருவ வடிவத்தைக் குறித்தால், முக லிங்கம் அவனது அருவுருவ வடிவைக் குறிக்கிறது. அவை மூவகை: சஹஸ்ர லிங்கம் (ஆட்யம்) - 1008 லிங்கங்களை கொண்டது. சுரேட்யம் - 108 லிங்கங்களை கொண்டது. சர்வசமம் - ஒன்று முதல் ஐந்து முகங்கள் கொண்டது. அண்ணாமலையார் ஆலயத்தில் இரண்டாம் திருச்சுற்றில் வடமேற்கு பாகத்தில் உள்ள சகஸ்ர லிங்கம். நன்றி: சக்தி விகடன்  https://www.vikatan.com/spiritual/temples/84199- அண்ணாமலையார் ஆலயத்தில்  உள்ள சகஸ்ர லிங்கம். நன்றி: சக்தி விகடன்  https://www.vikatan.com/spiritual/temples/84199- சர்வசமம் ஒரு முகம் - ஏக முக லிங்கம். இரு முகங்கள் - துவி முக லிங்கம். மூன்று முகங்கள் - திரி முக லிங்கம். நான்கு முகங்கள் - சதுர் முக லிங்கம். ஐந்து முகங்கள் - பஞ்ச முக லிங்கம். சிவனுக்கு ஐந்து திசைகளில் ஐந்து முகங்கள் உண்டு. அவை சிவனின் ஐந்து தொழில்களை குறிப்பவை. 1. மேற்கு - சத்யோஜாதம் - படைத்தல் - நிலம் - வெண்மை 2. வடக்கு - வாமதேவம் - காத்தல் - நீர...

காலனைக் கடிந்த பெம்மான், கால சம்ஹார மூர்த்தி

Image
நான் கீழ்கண்ட காலனைக் கடிந்த பெம்மான் சிற்பத்தைப் பார்த்தது கர்நாடக மாநிலம் பாதாமியில் உள்ள அருங்காட்சியகத்தில். 29/10/2019 அன்று. நுழைவாயிலை அடுத்த முன் கூடத்தில் இருந்தது சிற்பம். அருங்காட்சியகத்தில் உள்ள முதன்மையான காட்சிப்பொருட்களில் இதுவும் ஒன்று. இந்த சிற்பம் பட்டடக்கல் விருபாக்ஷர் கோயிலில் இருந்து கிடைத்தது. 8 ஆம் நூற்றாண்டு, சாளுக்கியர் கலை.  காலனைக் கடிந்த பெம்மான் (கால சம்ஹார மூர்த்தி, காலாரி) பாதாமி அருங்காட்சியகம் சிற்பத்தில் சிவனும் காலனும் உள்ளனர். சிவன் காலனை உதைத்து கீழே தள்ளி சூலத்தால் குத்தும் காட்சி. சூலத்தின் மும்முனையால் அல்லாது அதன் தண்டின் அடி நுனியால் குத்துவது சாளுக்கியர் சிற்பங்களில் காணப்படுவது. அவர்களது மகிஷாசுரமர்த்தினி படிமத்திலும் இவ்வாறே காணப்படுகிறது. சிவன் சூலத்தை வலுவாக ஏந்தியுள்ள முறை கவனிக்கத் தக்கது.  சிவன்  சிவன் ஜடாமகுடத்திற்கு பதில் கிரீட மகுடம் அணிந்துள்ளார். அதன் இடப்புறம் பிறைச்சந்திரன். கழுத்தில் சரப்பள; கரங்களில் கைவளை, தோள்வளை; இடையில் உத்தரபந்தம், அரைப்பட்டிகை  அணிந்து இடையாடை உடுத்தியுள்...