ஜுரஹரேஸ்வரர்

ஜுரஹரேஸ்வரர், ஜ்வரபக்ன மூர்த்தி எனப்படும் சுரம் நீக்கும் பரமன் 64 சிவ மூர்த்தங்களுள் ஒன்று. அரிதாகவே காணப்படும் இந்த மூர்த்தம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளைகாப்பு மண்டபத்தின் நடுவே உள்ள மேடையின் நான்கு தூண்களில் வடகிழக்குத் தூணிண் அடிப்பகுதியில் வடக்கு (1000 கால் மண்டபத்தை) நோக்கியுள்ளது. 

சுரம் நீக்கும் பரமன் (ஜ்வரபக்ன மூர்த்தி): வளைகாப்பு மண்டபம்

தூக்கிய இடது திருவடி, வீசிய முன் இடது கை, தழல் ஏந்திய இடது பின்கை இவற்றால் முதலில் நடராஜர் திருவடிவம் போலத் தோன்றினாலும் இந்த திருவடிவம் 3 முகங்களும், 3 கைகளும் 3 கால்களும் உடையது. 

ஜ்வரபக்ன மூர்த்தியை வழிபட்டால் சுரம் தீரும் என்று நம்பப்படுகிறது. 

புராணம்

இத்திருவடிவத்தின் பின் உள்ள புராணக்கதை என்ன? மகாபாரத காலத்தில் வாழ்ந்தவன் ஆயிரம் கைகளுடைய வாணாசுரன். திருமாலின் ஐந்தாம் அவதாரமாகிய வாமனருக்கு மூன்று அடி மண் கொடுத்த மகாபலியின் மகன். சிறந்த சிவபக்தனான இவனது வேண்டுதலுக்கு சிவன் இணங்கி , பார்வதி, கணேசர், முருகரோடு அவன் அரண்மனையில் தங்கி இருந்தார். தன் மகள் உஷை கண்ணனின் மகன் அநிருத்தனை காதலிப்பது அறிந்த வாணாசுரன் அநிருத்தனைச் சிறையிலிட்டான். தன் மகனை மீட்க வந்த கண்ணன் முதலில் அங்கிருந்த சிவனுடன் போரிட வேண்டியதாயிற்று. கண்ணனுடன் களிப்போர் புரிந்த சிவன் பின்பு விலகி வழிவிட கண்ணன் வாணாசுரனின் 998 கைகளை வெட்டி வெற்றிகொண்டான். அநிருத்தன் உஷையை மணந்தான். சிவனருளால் வாணாசுரன் இழந்த கைகளைத் திரும்பப் பெற்றான். சிவனுக்கும் கண்ணனுக்கும் இடையேயானப் போரின்போது கண்ணன் சிவன்மீது குளிர் சுரத்தை ஏவினான். வெம்மை சுரத்தை ஏவி சிவன் அதை முறியடித்தான். அதுவே ஜ்வரபக்ன மூர்த்தி எனப்படும் சுரம் நீக்கும் பரமன் திருவடிவம்.

இடங்கள்

இந்தத் திருவடிவம் அமைந்துள்ள இடங்கள்:
  1. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில்
  2.  நாகப்பட்டினம் அருகிலுள்ள சாட்டியாங்குடி, 
  3. ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேசுவரர் கோயில், 
  4. திருவில்லிபுத்தூர் வைத்தியநாதசுவாமி கோயில் 
  5. திருச்சி தாயுமானவர் கோயில்
  6. கங்கை கொண்டான் திருநெல்வேலி
  7. நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி
  8. திருக்கொண்டீஸ்வரம்
சிற்பங்கள்

தனிச் சிற்பங்கள் - கல்

கங்கை கொண்டான், திருநெல்வேலி
(படம் நன்றி: பார்த்தி TMVAS வாட்ஸப் குழு)

திருச்சி தாயுமானவர் கோயில்
(படம் நன்றி: குஹன் TMVAS வாட்ஸப் குழு)

நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி
(படம் நன்றி: விஜய் ஷங்கர் பட் TMVAS வாட்ஸப் குழு)

பவானி சங்கமேஸ்வரர் கோயில்
(படம் நன்றி: காயத்ரி குமரன் TMVAS வாட்ஸப் குழு)

பவானி சங்கமேஸ்வரர் கோயில்
(படம் நன்றி: கோபி செல்வநாதன் TMVAS வாட்ஸப் குழு)

தனிச் சிற்பங்கள் - சுதை

வைத்தீஸ்வரன் கோயில் (தனி சந்நிதி)
(படம் நன்றி: சுமதி நாதன் TMVAS வாட்ஸப் குழு)

புடைப்புச் சிற்பங்கள்

திருக்கொண்டீஸ்வரம்
(படம் நன்றி: கணேஷ் TMVAS வாட்ஸப் குழு)
ஜுரஹரேஸ்வரருக்கான தனிக்கோயில் காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது.

மகிமை

(படம் நன்றி: குஹன் TMVAS வாட்ஸப் குழு)

(படம் நன்றி: கோபி செல்வநாதன் TMVAS வாட்ஸப் குழு)


துணைநூல்கள், சுட்டிகள்:
  1. அஷ்டாங்க மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்' - இரா. இராமகிருட்டினன்; நர்மதா பதிப்பகம்; 2016
  2. தமிழ் விக்கிப்பீடியா - சுரம் நீக்கும் பரமன்
  3. தினமலர் கோயில்கள் - சிவவடிவங்கள் ஜ்வரபக்ன மூர்த்தி



Comments

Popular posts from this blog

ஏகபாத மூர்த்தி

திருமாலின் 24 வடிவங்கள்

முருகன் ஊர்தியான மயிலின் வகைகள்